மாலைக்குப் பின் ஏர்செல் சேவையில் மீண்டும் பாதிப்பு?... தென்இந்திய சிஇஓ சங்கரநாராயணன் எச்சரிக்கை!
ஏர்செல் சேவையானது மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தென்இந்திய சிஇஓ சங்கரநாராயணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: செல்போன் டவர் நிறுவனம் மீண்டும் பிரச்னையை எழுப்புவதால் இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னலில் மீண்டும் கோளாறு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தில் தென்இந்திய சிஇஓ சங்கரநாராயணன் கூறியுள்ளார். எனவே ஏர்செல்லில் மட்டும் ஆன்லைன் பரிவர்த்தணைக்கான வசதிகள் வைத்திருப்போர் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
செல்போன் டவர் நிறுவனத்திற்கும் ஏர்செல் நிறுவனத்திற்கும் இடையிலான நிதிப் பிரச்னையில் டவரை நிர்வகிக்கும் நிறுவனம் திடீரென இழுத்து மூடியதால் நாடு முழுவதும் கடந்த வாரத்தில் ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டது. தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிக அளவில் இருந்தது. ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் ஷோரூம்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் செல்போன் டவர் நிறுவனத்துடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்திகடந்த 2 நாட்களாக ஏர்செல் சேவை சீரடைந்து வந்தது. இதனிடையே இன்று மாலையில் இருந்த சிக்னல் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம் என்று ஏர்செல் நிறுவன தென்இந்திய செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். டவர் நிறுவனம் மீண்டும் பிரச்னையை எழுப்பி வருவதால் ஏர்செல் நிறுவனம் மூலம் அதனை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இது கைகொடுக்காத பட்சத்தில் இன்று மாலை முதல் ஏர்செல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆன்லைன் பணப்பரிமாற்றம், கேஸ்புக்கிங் உள்ளிட்டவற்றிற்கு ஏர்செல் சிம்கார்டுகளை மட்டுமே வைத்துள்ளவர்கள் மாலைக்குள் அதனை செய்து விடும்படியும் சங்கரநாராயணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் ஏர்செல் நிறுவன நிர்வாகியே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications