தாம்பரம் விமானப்படை தளத்தில் துப்பாக்கியால் சுட்டு ஏர்மேன் தற்கொலை
சென்னை தாம்பரத்தில் விமான படை தளத்தில் ஏர்மேன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: சென்னை தாம்பரத்தில் விமான படை வீரர் சபீர் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சபீர் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தாம்பரம் விமான படை தளத்தில் உள்ள ரன்வேயில் நேற்றிரவு பணியின் போது சபீர் சிங் தன்னிடமிருந்த தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்
தாம்பரம் விமானப்படை தளத்தில் பணிபுரியும் வட இந்திய விமானப்படை ஊழியர்கள் பணிச்சுமையினால் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி பட்னாயக் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்றிரவு விமான படை தளத்தில் உள்ள ரன்வேயில் நேற்றிரவு பணியின் போது சபீர் சிங் தன்னிடமிருந்த தற்கொலை செய்துகொண்டார். சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை குறித்த எண்ணம் தோன்றினாலே சில நிமிடங்கள் ஒத்திப்போடுவதன் மூலம் தற்கொலையை தடுக்கலாம் என்று சிநேகா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள் 24640050 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் தற்கொலையை தவிர்க்கலாம் என்றும் சிநேகா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.