பிளஸ்டூ தேர்வு... அன்பு மகளுக்கு வாழ்த்து தெரிவித்த ஏ.கே.மூர்த்தி!
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்டூ தேர்வு தொடங்கியது. இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளன. ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 106 சிறைக் கைதிகள் உள்ளிட்ட 6,550 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82,044 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.
இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள்
Posted by AK Moorthy on Thursday, March 3, 2016
தேர்வு எழுதுபவர்களில் 3 லட்சத்து 91,806 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 47,891 பேர் மாணவிகள். மாணவர்களைவிட 56,085 மாணவிகள் கூடுதலாகத் தேர்வு எழுதுகின்றனர். இவர்களைத் தவிர, 42,347 பேர் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதப் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு எழுதும் கைதிகள்: சென்னை புழல், திருச்சி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் 106 சிறைவாசிகளும் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வெழுதவுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சரும், பாமக தலைவருமான ஏ.கே.மூர்த்தி தனது மகள் பிளஸ்டூ தேர்வு எழுதுவதையொட்டி அவரது புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்து தனது பேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.