ஆலந்தூர் இடைத் தேர்தல்- அதிமுக வேட்பாளராக (மீண்டும்) பண்ருட்டி ராமச்சந்திரன்?
சென்னை: லோக்சபா தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக வேட்பாளராக இத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரனே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
தேமுதிகவின் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியிலிருந்து விலகியதுடன் ஆலந்தூர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா திமுகவில் இணைந்தார்.
இதனால் ஆலந்தூர் சட்டசபை எம்.எல்.ஏ காலியானது. இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவித்தது.
ஆலந்தூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதிமுக வேட்பாளராக மீண்டும் அத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரனே போட்டியிடலாம் என்கிறது அதிமுக வட்டாரங்கள்.