அலங்காநல்லூரில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு.. போலீசார் குவிப்பு.. பதற்றம் அதிகரிப்பு
மதுரை அலங்காநல்லூரில் தடையை மீறி இன்றுஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.
மதுரை: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடக்காமல் இருக்க அனைத்துவிதமான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு என்றால் மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களை மறக்க முடியாது. ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டுக்காரர்களும் இந்த இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு கழித்து வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டோடு 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை நடத்த முடியாத அளவிற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு தடை விதித்து உள்ளது.

இந்நிலையில், பாலமேட்டில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றும், பாலமேட்டில் காளைகளை சிலர் அவிழ்த்துவிட்டனர் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியுள்ளார். இதே பிரச்சனை குறித்து இன்று காலை பேசிய மதுரை எஸ்.பி.விஜயேந்திர பிதாரியும் பாலமேட்டில் காளைகளுக்கு பூஜை மட்டுமே நடைபெற்றது என்று கூறினார்.
இந்நிலையில், அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடப்பதற்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் செய்து வருவதாக கூறியுள்ளார். இதனையடுத்து, அலங்காநல்லூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications