அசத்தலாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. ஒரே சுற்றில் 8 காளைகளை பிடித்த வீரருக்கு கார் பரிசு
மதுரை: உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று காலை தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டை காண பார்வையாளர்கள் குவிந்திருந்தனர். மீடியாக்கள் பலவும் நேரடி ஒளிபரப்பு செய்தன. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முன் கோயில் காளைகளுக்கு மரியாதை வழங்கப்பட்டது. இதன்பிறகு, முதல்வர் முன்னிலையில் மாடுபிடிவீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். முதல்வரும், துணை முதல்வரும் ஜல்லிக்கட்டை பார்வையிட்டு மகிழ்ந்தனர். காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு சுமார் 1 கோடி ரூபாய்க்கு பரிசுமழை அறிவிக்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. மொத்தம் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டிருந்தன. 697 வீரர்கள் அதில் பங்கேற்றனர். ஒரே சுற்றில் 8 காளைகளை பிடித்த 681-ஆம் எண் கொண்ட மாடுபிடி வீரர் அஜய் முதல் பரிசாக 'ஹேட்ஸ்பேக்' வகை காரை தட்டிச் சென்றார்.
ஒரே சுற்றில் 6 காளைகளை பிடித்த, 670-ம் ஆண் வீரர் மற்றும் 214-ம் எண் வீரருக்கு 2வது இடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 11-ம் எண் வீரர் 3வது இடம் பிடித்தார்.
9 காளைகள் சிறப்பான காளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. அமைச்சர் உதயகுமார், ஜல்லிக்கட்டு நிறைவடையும்வரை உடனிருந்து வீரர்களை ஊக்குவித்தார்.












Click it and Unblock the Notifications