ஜன.16ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தயாராகும் காளைகள்
அலங்காநல்லூர்: பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஜனவரி 16ம் நடைபெறும் என விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
பொங்கல் திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டு என்று புகழப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படுகிறது.
மதுரையை சுற்றி உள்ள மாவட்டங்களிலேயே இந்த ஜல்லிகட்டுப் போட்டிகள் பாரம்பரிய முறைப்படி நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஊர்களில் ஜல்லிக்காட்டு நடத்தப்படுகிறது.
இதேபோல பொன்அமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்) திருவாப்பூர், வேந்தன்பட்டி சிரவயல்(காரைக்குடி மாவட்டம் ) பல்லவராயன் பட்டி (கம்பம்) கண்டுப்பட்டி (சிவகங்கை )ஆகிய இடங்களில் ஜல்லிகட்டு நடைபெறும்.
பல ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அலங்காநல்லூர் வருகிறார்கள். இதற்காக தமிழக அரசின் சுற்றுலாத் துறை சார்பில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ளது. ஜனவரி 16-ந்தேதி வியாழக்கிழமை அன்று அங்குள்ள கோட்டை முனி சாமி திடலில் நடைபெற உள்ளது.
இதையொட்டி முனியாண்டி சுவாமி கோவில் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்திற்குப் பின்னர் விழாக்குழுவினர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காளைகள் பதிவு
ஜல்லிக்கட்டிற்கு வருகிற 6-ந்தேதி முதல் 9-ம் தேதி முடிய 4 நாட் கள் காளைகள் பதிவு அங்குள்ள வருவாய்துறை அலுவலகத்தில் தொடங்கு கிறது. இதற்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் கால்நடைத்துறை மருத்துவர் களால் பரிசோதனை செய்த சான்றிதழ் மற்றும் மாடு பதிவிற்கான ஆவணங்களை வழக்கம்போல் சமர்ப்பிக்க வேண்டும்.

மாடுபிடி வீரர்கள்
மேலும் மாடுபிடி வீரர்கள் வருகிற 10, 11&ந் தேதி ஆகிய 2 நாட்கள் உரிய சான்றிதழ்களுடன், 21 வயது முதல் 40 வயது நிரம்பியவர்கள் மட்டும் தங்களது பெயர்களை வருவாய்துறை அலுவலகத் தில் பதிவு செய்யலாம்.

டோக்கன் முறை அமல்
ஜல்லிக்கட்டு விழா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த வருடம் டோக்கன் முறையில் வரிசை நம்பர்படி 1 முதல் 50 மாடுகளும் அதை தொடர்ந்து வரிசையாக முறைப்படி அதே முறை யில் மற்ற மாடுகள் அவிழ்த்து விடப்படும்.

மோட்டார் பைக் பரிசு
சிறந்த மாட்டிற்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் விழா முடிந்த பிறகு மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல்துறை கண்காணிப் பாளர் முன்னிலையில் மோட்டார் சைக்கிள் தனித்தனியாக பரிசாக வழங்கப்படும்.

தங்கம், வெள்ளி பரிசு
இது தவிர, ஜல்லிக்கட்டு காளைகளை மடக்கி பிடிக்கும் வீரர் களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், வாஷிங்மிஷின் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், எல்.சி.டி. டி.வி., தஞ்சாவூர் தட்டுகள் உள்பட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

பல மாவட்ட காளைகள்
மேலும், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கோவை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாத புரம், விருதுநகர் மற்றும் மதுரை உள்பட பல மாவட் டங்களிலிருந்து, ஜல்லிக்கட்டு காளைகள் இங்கு வந்து கலந்து கொள்ளும்.

போலீஸ் பாதுகாப்பு
உச்சநீதிமன்ற வழி காட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் நேரடி மேற் பார்வையில் விலங்குகள் நலவாரியம் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு விழா நடைபெறுகிறது. வழக்கம் போல் தேவையான போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications