டெல்லி பலாத்கார சம்பவம்: சென்னை கால் டாக்சிகளில் எச்சரிக்கை பட்டன் வைக்க முடிவு
சென்னை : டெல்லி பலாத்கார சம்பவத்தை அடுத்து சென்னையில் ஓடும் கால் டாக்சிகளில் பெண்களுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் இரவு விருந்து முடிந்து கால் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னையில் ஓடும் கால் டாக்சிகளில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் எச்சரிக்கை அலாரம் பொருத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, கால் டாக்சிகளில் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் மற்றும் ஜி.பி.எஸ். டிராக்குடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்துதல் போன்றவற்றையும் அமல் படுத்தும் திட்டம் உள்ளதாம்.
இந்த எச்சரிகை பட்டன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்குமாம். ஆபத்துக் காலத்தில் பெண்கள் இதை உபயோகித்துக் கொள்ளலாம். ஜிபிஎஸ் உதவியால் வாகனம் உடனடியாக பிடிக்கப் பட்டு, பெண்கள் பாதுகாப்பாக மீட்கப் படுவார்கள் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications