சுப. உதயகுமார், ஞாநி உட்பட ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அனைவருமே டெபாசிட் இழப்பு!!
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களான சுப. உதயகுமார், பத்திரிகையாளர் ஞாநி உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.
16-ஆவது லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் மத்திய சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 24 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் டெபாசிட் கூட பெறவில்லை.

புஷ்பராயன் 26,476
தூத்துக்குடி தொகுதி வேட்பாளர் எம்.புஷ்பராயன் அதிகபட்சமாக 26,476 வாக்குகள் பெற்றார்.

சுப. உதயகுமார் 15,314
அணுஉலைக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த கன்னியாகுமரி வேட்பாளர் சுப.உதயகுமார் 15,314 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். இத்தொகுதியில் அவர் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

புதுச்சேரி..
அதேபோல் புதுச்சேரியில் போட்டியிட்ட வி.ரங்கராஜன் 8,307 வாக்குகள் பெற்று, டெபாசிட் இழந்தார். அவர் அங்கு 7 வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

ஞாநிக்கு 5,729
ஆலந்தூர் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் 5,729 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

அனைத்து இடத்திலும் டெபாசிட்
தமிழகம் மற்றும் புதுவையில் முதல் முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்தது.












Click it and Unblock the Notifications