அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வர முதல்வர் உத்தரவு!
தினகரன் அணிக்கு எம்எல்ஏக்கள் தாவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக அதிமுக எம்எல்ஏ-க்கள் சென்னைக்கு வர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அமைச்சர்களுடன் தன்னை தலைமை செயலகத்தில் வந்து நாளை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் அதிகார போட்டி முற்றிவிட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் நாளுக்கு நாள் தீவிரமடைய தொடங்கிவிட்டனர். கடந்த வாரம் எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இதுமட்டுமல்லாமல் தினகரனுக்கு மேலும் சில எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி அணியில் தங்களுக்கு ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்றும் தினகரன் குரூப் பீதியை கிளப்பி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் நாளை காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் தம்மை சந்திக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இப்படியே ஒவ்வொருவராக தினகரன் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால், அரசு பெரும்பான்மை இழந்துவிடும் என்பதை உணர்ந்துள்ளார் முதல்வர். மேலும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும் உற்று நோக்கி வரும் அவர் இதற்கு மேலும் தமது அணியில் இருந்து தினகரன் அணிக்கு செல்வதை தடுக்கவே எம்எல்ஏக்களை நாளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாத நிலையில் முதல்வரின் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications