மக்களின் குரலாக ஒலித்த எம்.ஆர்.ராதா மகனே இப்படி பேசலாமா.. ஆளூர் ஷாநவாஸ் வேதனை
சென்னை: மாற்றுத்திறனாளிகள் குறித்து நடிகர் ராதாரவி பேசியதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தி.மு.க.வில் இணைந்துள்ள நடிகர் ராதாரவி, சென்னையில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய வீடியோ பதிவை நண்பர் நடராஜன் ராஜகோபால் பக்கத்தில் கண்டேன். ராதாரவி முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளதாக நரேன் எழுதியிருந்ததால், அதை ஆர்வமுடன் பார்த்தேன்.

வழக்கம்போல் ராதாரவி பேசினார். ஆனால், பேச்சினூடாக வைகோவையும் ராமதாசையும் விமர்சிப்பதாகக் கூறி, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் இழிவு படுத்தினார். மேடையில் இருந்த எழும்பூர் எம்.எல்.ஏ உட்பட அனைவரும் அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரிக்கின்றனர். பார்க்கவே சகிக்க முடியவில்லை.
உடல் குறைபாடுள்ளவர்களை குருடு, செவிடு, ஊமை, நொண்டி என்றெல்லாம் கொச்சையாக அழைக்கக் கூடாது; மாற்றுத் திறனாளிகள் என்றே அழைக்க வேண்டும் என அறிவித்தவர் கலைஞர் அவரது கட்சியிலேயே இப்படி ஒருவர் பேசியது அருவருப்பானது. இதை உடனடியாக கனிமொழி கண்டித்துள்ளார். தோழர் தீபக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் கொதித்து எழுந்து ராதாரவி வீட்டை முற்றுகை இட்டுள்ளனர்.
எளிய விளிம்பு நிலை மக்களின் குரலாக ஒலித்தவர் எம்.ஆர்.ராதா. அவரது மகனே இப்படி பேசியிருப்பது வேதனையானது; கண்டிக்கத் தக்கது. ராதாரவி செய்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அவர் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications