தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடத்த தயார்: சந்தீப் சக்சேனா
சென்னை: தமிழகத்தில் எப்போது தேர்தல் அறிவித்தாலும், தமிழக தேர்தல் ஆணையத்திடம் தற்போது உள்ள வாக்காளர் பட்டியலின்படி தேர்தலை நடத்த தயராக உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்போன் எண் இணைப்பதற்கான முகாம் குறித்து கூறினார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரும்‘ என்று அதிமுக எம்பி ஒருவர் கூறியுள்ளார். அப்படி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் தயாராக உள்ளதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்து சந்தீப் சக்சேனா, தற்போது வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் சரி செய்வதற்கான பணிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. மேலும், தேர்தல் உடனடியாக வருவதாக இருந்தாலும் சரி, பின்னர் வருவதாக இருந்தாலும் சரி, வாக்காளர் பட்டியல் எப்போதும் தயாராக இருக்கும். என்ன நிலைமையில் இப்போது வாக்காளர் பட்டியல் உள்ளதோ அந்த அடிப்படையில் தேர்தல் நடக்கும். தேர்தல் இருந்தாலோ இல்லை என்றாலே வாக்காளர் பட்டியல் எப்போதும் தயாராக இருக்கும் என்றார்.

ஆதார் எண் இணைப்பு
மேலும் அவர், தமிழகத்தில் மார்ச் 3ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் ஆதார் மற்றும் செல்போன் எண், இ,மெயில் முகவரி இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, பொதுமக்களிடம் அதற்கான விண்ணப்பம் அளித்து தகவல் திரட்டி வருகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில் 2 கோடி பேரிடம் தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 35 லட்சம் பேரின் ஆதார், செல்போன் எண், இ.மெயில் முகவரி தகவல்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அலுவலகம், தனியார் நிறுவனங்களில் வேலை செய்வோரின் நலனை கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் 63 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில், 4 நாள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

சிறப்பு முகாம்கள்
அதன்படி நாளை, வருகிற 26ஆம் தேதி, மே மாதம் 10 மற்றும் 24ம் தேதி ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமை இந்த சிறப்பு முகாம் நடைபெறும். வழக்கமாக வாக்களிக்கும் செல்லும் மையங்களுக்கு பொதுமக்கள் வந்து, ஆதார் எண், செல்போன், இ,மெயில் முகவரிகளை பதிவு செய்து விட்டு செல்லலாம். காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள அலுவலர்கள் இரண்டு லேப்டாப் மூலம் உடனடியாக தகவல்களை பதிவு செய்வார்கள்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பு
சிறப்பு முகாமுக்கு வரும் பொதுமக்கள், ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வர வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தொகுதிக்குள் மாற்றம், தொகுதி விட்டு தொகுதி மாற்றம் செய்ய விரும்புபவர்களும் இந்த சிறப்பு முகாமுக்கு வந்து சரி செய்து கொள்ளலாம். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த பணிகளை, 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். வாக்காளர் பட்டியலில் பொதுமக்களின் ஆதார் எண், இ,மெயில் மற்றும் செல்போன் எண்களை இணைக்கும்போது பொதுமக்கள் தேர்தல் குறித்த அனைத்து தகவல்களையும் நேரிடையாக தெரிந்து கொள்ள முடியும். இந்த பணிகள் அனைத்தும் மே 31ஆம் தேதியுடன் முடிவடையும் என்றார்.

நடமாடும் முகாம்கள்
தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் 70 சதவீதத்திற்கு மேல் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 68 சதவீதம் ஆதார் அட்டை வழங் கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள 4.18 கோடி பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது 82 சதவீதம். ஆதார் அட்டை அதிகம் இல்லாத பகுதிகளில் நடமாடும் முகாம்கள் நடத்தி, ஆதார் அட்டை வழங்க வருவாய் துறை மற்றும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கவும் திட்டம் உள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், சிறப்பு முகாம்களுக்கு வந்து ஆதார் பதிவு எண் (இஐடி) அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கிய எண்ணை (என்பிஆர்,டின்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications