இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டது- ஜெ.,வுக்கு அமெரிக்க அரசு இரங்கல்#RIPAmma
இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை: உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, இதயம் செயலிழந்ததால் நேற்று இரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தேசிய கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது, முதல்வரின் மறைவையொட்டி 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளாது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கா அரசு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டதாக தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க தூதர் இரங்கல் செய்தி
தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'அமெரிக்கா-இந்தியா இடையிலான நெருங்கிய உறவுகளை ஆதரித்ததுடன் தமிழ்நாட்டுக்காக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தவர் என்ற முறையில் ஜெயலலிதா நினைவுகூரப்படுவார். இந்த துயரமான நேரத்தில் எங்களது எண்ணங்களும் பிரார்த்தனையும் தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்திருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications