தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்.. தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரும் விடுதலை
தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்து சிறை தண்டனை பெற்ற வழக்கில் அமெரிக்க கப்பல் அதிகாரிகள் 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: தூத்துக்குடி கடற்பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்க கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் 35 பேரை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விடுதலை செய்தது.
அமெரிக்காவின் எம்.வி. சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பல் அத்துமீறி தூத்துக்குடி கடற்பரப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு நுழைந்தது. இதையடுத்து அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.

அப்போது அதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பாதுகாப்பு படை வீரர்களும் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் 35 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 35 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தூத்துக்குடி நீதிமன்றம் 35 பேருக்கு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்டபோது அபராதம் ஏதும் அவர்களிடம் இருந்து பெற்றிருந்தால் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க பாஸ்போர்ட் முடக்கியிருந்தால் 35 பேரும் மனுதாக்கல் செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications