தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்.. தண்டனை விதிக்கப்பட்ட 35 பேரும் விடுதலை
தூத்துக்குடி கடலில் அத்துமீறி நுழைந்து சிறை தண்டனை பெற்ற வழக்கில் அமெரிக்க கப்பல் அதிகாரிகள் 35 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை: தூத்துக்குடி கடற்பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அத்துமீறி நுழைந்த வழக்கில் தண்டனை பெற்ற அமெரிக்க கப்பலின் பாதுகாப்பு அதிகாரிகள் 35 பேரை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விடுதலை செய்தது.
அமெரிக்காவின் எம்.வி. சீமேன் கார்டு ஓகியோ என்ற கப்பல் அத்துமீறி தூத்துக்குடி கடற்பரப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு நுழைந்தது. இதையடுத்து அந்த கப்பல் சிறைபிடிக்கப்பட்டது.

அப்போது அதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பாதுகாப்பு படை வீரர்களும் கைது செய்யப்பட்டனர். கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் 35 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 35 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தூத்துக்குடி நீதிமன்றம் 35 பேருக்கு விதித்த சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்டபோது அபராதம் ஏதும் அவர்களிடம் இருந்து பெற்றிருந்தால் அதை திருப்பி ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க பாஸ்போர்ட் முடக்கியிருந்தால் 35 பேரும் மனுதாக்கல் செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications