மகேந்திரகிரி இஸ்ரோ மையம் மீது அடிக்கடி பறக்கும் குட்டி விமானம்.. அலட்சியமாக இருக்கும் அரசுகள்
வள்ளியூர்: மகேந்திரகிரி மலைப்பகுதியில் இஸ்ரோ மையம் மீது குட்டி விமானம் மீண்டும் பறந்ததையடுத்து 2 ஆவது நாளாக தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கட்டுப்பாட்டில் உள்ள திரவ இயக்க திட்ட மையம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மகேந்திர கிரி மலையில் உள்ளது.
மகேந்திரகிரி திரவ இயக்க மையம் தற்போது விண்வெளி ஆய்வில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மத்திய அரசினால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மகேந்திர கிரி திரவ இயக்க மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இந்த மையப்பகுதிக்குள் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் புகுந்தார். இவர் மலையில் திரவ இயக்க மையத்தின் முக்கிய பகுதிகளை ரகசியமாக கண்காணித்த வண்ணம் காமிராவுடன் சென்றுள்ளார். இதை வனப்பகுதியில் ரோந்து சென்ற வன ஊழியர்கள் கண்டுபிடித்து அவனை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
திரவ இயக்க திட்ட மைய அதிகாரிகள் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் பணகுடி போலீசாரும் விசாரித்தனர். இந்த நிகழ்வை தொடர்ந்து திரவ இயக்க திட்ட மையத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆராய்ச்சி மையத்திலும், சுற்றுப் பகுதியிலும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வீரர்கள் சுற்றி வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில், ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள மலைப்பகுதியின் மேலே சிறிய விமானம் ஒன்று பறந்து உள்ளது. அந்தப் பகுதியை 3 முறை வட்டமடித்த அந்த விமானத்தில் இருந்து சப்தம் வரவில்லை என கூறப்படுகிறது. விமானத்தின் கீழ் பகுதியில் 7 சிவப்பு விளக்குகளும், ஒரு பச்சை விளக்கும் எரிந்து உள்ளன.
ஆராய்ச்சி மையம் மலைப்பகுதியில் வடக்கு, தெற்காக வட்டமடித்த அந்த விமானம் தூத்துக்குடியை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. இதுபற்றி பொதுமக்கள் பலரும் நேற்று காலையில் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து, வனத்துறையினரும், பணகுடி போலீசாரும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள வனப்பகுதியில் சூறாவளி ஊத்து என்ற பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
மலைப்பகுதியில் உள்ள கஞ்சிப்பாறை, குன்னிமுத்து சோலை என்ற இடம்வரை போலீசார், வனத்துறை சோதனை நடத்தினர். அப்போது விமானம் வந்து இறங்கியதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. நள்ளிரவு வரை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நள்ளிரவு மீண்டும் கிளைடர் விமானம் பறந்தது. விளக்கு ஒளியுடன் விமானம் பறந்ததை வனத்துறையினர் பார்த்துள்ளார்கள். பாதுகாக்கப்பட்ட இந்த பகுதியில் மீண்டும் விமானம் பறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நவீன உபகரணங்கள் மூலம் வான்வெளியையும் கண்காணிக்க வேண்டியது அவசியம் என அப்பகுதியினர் கூறுகின்றனர். நுழைவுப் பகுதியில் மட்டும் கெடு பிடியாக உள்ள பாதுகாப்பு ஊழியர்கள் ஒட்டுமொத்த திரவ இயக்க திட்ட மைய பாதுகாப்பு விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார்கள் ஆய்வு மைய அதிகாரிகள். குட்டி விமானம் பறந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications