ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியிடம் சாக்கு பை நிறைய 10 ரூபாய் நாணயங்கள்... கொடுத்து யார்? எதற்காக?
ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக அளித்ததால் அதை எண்ணுவதற்குள் திணறி விட்டனர் அதிகாரிகள்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த வந்த சுயேச்சை வேட்பாளர் 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக டெபாசிட் தொகையை 10 ரூபாய் நாணயங்களாக அளித்து தேர்தல் நடத்தும் அதிகாரியை திக்குமுக்காட செய்துவிட்டார்.
ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் 12- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பலமுனை போட்டி நிலவுகிறது. மக்கள் செல்வாக்கை பெறும் தேர்தலாக கருதப்படுகிறது.
அதிமுக பிளவுபட்ட பிறகு எந்த அணிக்கு செல்வாக்கு உள்ளது என்பதையும், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதையும் தெளிவுப்படுத்தும் தேர்தலாக இது உள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்
ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தில் மரணம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர். அதிலும் தங்களின் 2 முறை எம்எல்ஏ-வும், மாநில முதல்வருமான ஜெயலலிதாவின் மர்ம மரணத்தால் ஆர்.கே.நகர் தொகுதியே கொந்தளிப்பில் உள்ளது.

யாருக்கு ஆதரவு
இந்நிலையில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக ஓபிஎஸ் அணி, திமுக என கூறினாலும், அந்த மரணம் இயற்கையானதே என்று சசிகலா தரப்பு தெரிவிக்கிறது. இதனால் மக்களின் ஆதரவு யாருக்கு என்பது இந்த தேர்தலின் மூலம் தெரியவரும்.

வேட்புமனு தாக்கல்
ஆர்.கே. நகர் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியதை அடுத்து முதன்முறையாக தேமுதிக வேட்பாளர் மா.செ. மதிவாணன் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் சில சுயேச்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நீதி கேட்ட சுயேச்சை
இந்நிலையில் தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்துக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் கணேஷ் (52), ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதால் நீதி கேட்பதை குறிக்கும் வகையில் தராசுடன் வந்தார்.

திக்கு முக்காடிய அதிகாரி
தேர்தலில் போட்டியிட ரூ.10 ஆயிரம் டெபாசிட் தொகையை தேர்தல் 10 ரூபாய் நாணயங்களாக அளித்ததால் அதை எண்ணுவதற்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவி திக்குமுக்காடினார்.

விழிப்புணர்வு ஏற்படுத்த...
ரூ.10 நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி வரும் நிலையில் அது செல்லும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெபாசிட் தொகையை ரூ.10 நாணயங்களாக கொண்டு வந்ததாக வேட்பாளர் கணேஷ் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications