For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட! இப்படிக் கூட திருமணம் செய்யலாம்ன்னு அசத்திய கோவை ஜோடி!

தங்கள் திருமணத்தில் ஆதரவற்ற குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்து அவர்களிடம் வாழ்த்துகளையும் பெற்ற புதுமண தம்பதியை அனைவரும் வாழ்த்துகின்றனர்.

Google Oneindia Tamil News

கோவை: திருமண விழாவில், ஆதரவற்ற குழந்தைகளை கலந்துகொள்ளச் செய்து அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்ற ஜோடியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கோயமுத்தூர் மாவட்டம், சோமனூரில் உள்ளது கொங்கு திருமண மண்டபம். இங்கு கடந்த 2ஆம் தேதி அரவிந்த்- சாதனா ஜோடிக்கு திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

An innovative wedding in coimbatore

இந்த திருமணத்தில் ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பான வகையில் திருமண விருந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அக்குழந்தைகள் மணமக்களை வாழ்த்திப் பாட்டுப் பாடினர்.

பின்பு, மணமக்களுடன் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஆதரவற்ற குழந்தைகள் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத போது, இப்படியொரு விழாவில் கலந்துகொண்டது அவர்களுக்கு நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இது, இனி திருமணத்தை நடத்துபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

English summary
In a wedding function at Coimbatore, orphanage children came and wished the new couple.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X