நள்ளிரவில் பழ.கருப்பையா வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழ. கருப்பையா வீட்டை மர்ம நபர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பழ.கருப்பையா வீட்டின் மீது கற்களை வீசிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.கவைச் சேர்ந்த பழ.கருப்பையா துறைமுகம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. இந்நிலையில் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பழ.கருப்பையா நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டார்.

அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதையடுத்து தன்னுடைய எம்.எல்.ஏ பதவியினை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார் கருப்பையா.
இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டின் மீது இந்த கற்கள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலையடுத்து, "ராயப்பேட்டையில் எனது வீட்டினைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பழ.கருப்பையா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் பழ.கருப்பையா அதிமுகவில் இருந்த போதே ஒருமுறை இதுபோன்று அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications