முழு மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்-அன்புமணி வேண்டுகோள்
தமிழகத்தில் முழு மதுவிலக்கை செயல்படுத்த வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று புதிதாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளையும் தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும் என்றும் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளை உடனடியாக மூட சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மதுவுக்கு எதிராக பா.ம.க நடத்தி வரும் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தில் இது இன்னொரு வெற்றியாகும். இத்தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. உயர்நீதிமன்ற ஆணைக்குப் பிறகும் சொத்தைக் காரணங்களைக் கூறி மதுக்கடைகளை மூட அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 3321 மதுக்கடைகள் பா.ம.க. தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 31.03.2017 அன்று மூடப்பட்டன. மக்கள் நல அரசாக இருந்திருந்தால் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடை முறைப்படுத்தி இருந்திருக்க வேண்டும். ஆனால், அரசோ, நகர்ப்புறங்களில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 1,700 மதுக்கடைகளை சட்டவிரோதமாக திறக்கத்துடித்தது. அதில் ஓரளவு வெற்றியும் அடைந்தது. அதற்கு எதிராக பா.ம.க.வின் வழக்கில் தான் அரசுக்கு உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை மூட ஆணையிட்ட உச்சநீதிமன்றம், அந்தத் தீர்ப்பிலிருந்து சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் உள்ள நகர்ப்புற நெடுஞ்சாலைகளை மட்டும் உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்தது. இதைப்பயன்படுத்தி தமிழகத்திலுள்ள நகர்ப்புற நெடுஞ்சாலைகளை உள்ளூர் சாலைகளாக மாற்றி மதுக் கடைகளை திறக்க தமிழக ஆட்சியாளர்கள் முயன்றனர்.
இடைப்பட்ட காலத்தில் சண்டிகருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதைப்பயன்படுத்திக் கொண்டு நெடுஞ்சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு துடித்தது. ஆனால், தமிழகத்தில் சாலைகளை வகை மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் புதிய மதுக்கடைகளை திறக்க முடியாது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை மறைத்து விட்டு, தமிழகத்தின் நகர்ப்புறங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகளை திறப்பதற்கான சுற்றறிக்கையை கடந்த 01.09.2017 அன்று மதுவிலக்கு மற்றும் கலால்துறை ஆணையர் பிறப்பித்தார்.
அதைப் பயன்படுத்தி சுமார் 700 மதுக் கடைகள் திறக்கப்பட்டன. அவை அனைத்தும் சட்ட விரோதமாக திறக்கப்பட்டவை என்பதை பா.ம.க. ஆதாரங்களுடன் நிரூபித்ததைத் தொடர்ந்தே அந்தக் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
மதுவை நம்பி ஆட்சி நடத்தும் நிலையை ஆட்சியாளர்கள் மாற்ற வேண்டும். நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடும்படியும், புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதித்து புதிதாக திறக்கப்பட்ட 700 மதுக்கடைகளை தமிழக அரசு உடனடியாக மூட வேண்டும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது. அத்துடன் மாதம் 500 கடைகள் வீதம் மூடி அக்டோபர் 2-ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை கண்டிப்புடன் செயல்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications