ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது- மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு!
ஜெயலலிதாவுக்கு நேற்று ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா இருந்து வருகிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரைடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவில் அறிக்கை வெளியிட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பலோ மருத்துவமனை முன்பாக அதிமுக தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டனர். தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுகவினர் சென்னை நோக்கி புறப்பட்டனர். அப்பலோவில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
இதன்பின்னர் மகாராஷ்டிராவில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனே சென்னை திரும்பி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராஜ்பவன் திரும்பிய உடனே ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விடிய விடிய எதிர்பார்த்தும் ஆளுநரிடம் இருந்து அறிக்கை வரவில்லை. இதனிடையே லண்டன் மருத்துவர் ஆலோசனையின்படி ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்ய இந்த ஆஞ்ஜியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனை முடிவடைந்ததும் ஜெயலலிதா தீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications