ஜெ.வுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது- மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பு!
ஜெயலலிதாவுக்கு நேற்று ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஆஞ்ஜியோ பரிசோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் ஜெயலலிதா இருந்து வருகிறார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரைடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனையில் இரவில் அறிக்கை வெளியிட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்பலோ மருத்துவமனை முன்பாக அதிமுக தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் திரண்டனர். தமிழகம் முழுவதும் இருந்தும் அதிமுகவினர் சென்னை நோக்கி புறப்பட்டனர். அப்பலோவில் தமிழக அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர்.
இதன்பின்னர் மகாராஷ்டிராவில் இருந்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனே சென்னை திரும்பி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ராஜ்பவன் திரும்பிய உடனே ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆளுநர் அறிக்கை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விடிய விடிய எதிர்பார்த்தும் ஆளுநரிடம் இருந்து அறிக்கை வரவில்லை. இதனிடையே லண்டன் மருத்துவர் ஆலோசனையின்படி ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்ய இந்த ஆஞ்ஜியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இப்பரிசோதனை முடிவடைந்ததும் ஜெயலலிதா தீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது முதல்வர் ஜெயலலிதா மருத்துவர்களின் தொடர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications