'ரிட்டர்ன்' அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்தது தி.மு.க.!
சென்னை: அ.தி.மு.க.வில் மீண்டும் சேரும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில் கருணாநிதியை சந்தித்த தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அக்கட்சிப் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனுக்கும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பெரியசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அனிதா ராதாகிருஷ்ணன் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார்.

இதனால் தி.மு.க. தலைமை அனிதா ராதாகிருஷ்ணனை சஸ்பென்ட் செய்தது. இதன்பின்னர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்து வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணணயவும் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவரை மீண்டும் சேர்த்துக் கொள்ள அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை. இதனால் வேறுவழியின்றி தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்னர் அனிதா ராதாகிருஷ்ணன் ரகசியமாக சந்தித்து பேசியிருந்தார்.
இதன் பின்னர் சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நேற்று நேரில் சந்தித்தார் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமியுடம் உடனிருந்தார்.
இருவரையும் கருணாநிதியும் ஸ்டாலினும் சமாதானப்படுத்தி கை குலுக்க வைத்தனர். அனிதா ராதாகிருஷ்ணனும் தி.மு.க.வில் தொடர்ந்து பணியாற்றுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சிப் பொதுச்செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழக பணியாற்ற அனுமதிக்குமாறு கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு இன்று முதல் தி.மு.க. உறுப்பினராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க












Click it and Unblock the Notifications