அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு திருப்பூரில் மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதம்
அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு திருப்பூரில் மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு திருப்பூரில் மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு திருப்பூரில் மாணவர் சங்கத்தினர் உண்ணாவிரதத்தை தொடங்கினர்.
அவர்கள் பெரியார் சிலை அருகே தங்களது போராட்டத்தை தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications