துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர்... தமிழகக் கல்வியாளர்களின் தரத்தை சர்வதேச அளவில் சிதைக்க சதி?
தமிழக பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலத்தவரை துணைவேந்தர்களாக நியமிக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழக பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக வெளிமாநிலத்தவர் தொடர்ந்து நியமிக்கப்படுவது மிகப் பெரும் சதியோ என சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சர்வதேச அளவில் தமிழகக் கல்வியாளர்களின் தரத்தை திட்டமிட்டு சிதைக்கும் சதித் திட்டம்தானா? இது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனத்துக்குப் பின் வட மாநிலங்களைப் போல இந்துத்துவா சக்திகள் தலையெடுப்பதும் ஊர்வலம் நடத்துவம் தொடர்கிறது. இதற்கு வழக்கம்போல தமிழகம் எதிர்வினையாற்றி வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக தமிழக பல்கலைக் கழகங்களை காவிமயமாக்கும் வகையில் வெளிமாநில இந்துத்துவா ஆதரவாளர்களை அடுத்தடுத்து தமிழகப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழ்நாடு இசை பல்கலைக் கழகத்துக்கு கேரளாவின் பிரமீளா குருமூர்த்தியை இறக்குமதி செய்தார் பன்வாரிலால் புரோஹித்.
இதற்கு நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது என பொங்கினார் புஷ்பவனம் குப்புசாமி.
இதையடுத்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு ஆந்திராவின் சாஸ்திரி நியமிக்கப்பட்டார். பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான, படுதீவிரமான இந்துத்துவாவாதியான சாஸ்திரியை நியமித்தது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில் தமிழகத்தின் தலைமகன்களில் ஒருவராக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் பெயரிலான பொறியியல் பல்கலைக் கழகத்துக்கு மற்றொரு இந்துத்துவவாதியான கர்நாடகாவின் சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இப்பதவிக்கு 170 பேர் விண்ணப்பித்தனர். இந்த 170 தமிழரில் ஒருவர் கூட அண்ணா பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராகும் தகுதி இல்லை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முடிவெடுத்திருப்பது தமிழகத்தின் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல்.
இப்படி அடுத்தடுத்து தமிழ்நாட்டின் பல்கலைக் கழகங்களில் வெளிமாநிலத்தவரே துணைவேந்தராக்கப்படுவதின் பின்னணியில் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இப்படி வெளிமாநிலத்தவரை திணிப்பதன் மூலம் சர்வதேச அளவில் தமிழகக் கல்வியாளர்களின் தரம் குறித்த சந்தேகத்தை திட்டமிட்டு பாஜக ஏற்படுத்துவதாகவே இது பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவின் தலைவராக தமிழகத்து சிவன் இருக்கிறாரே என தமிழிசை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதன் மூலமே இச்சதி அம்பலமாகிறது. இஸ்ரோ என்பது மத்திய அரசின் நிறுவனம். அண்ணா பல்கலைக் கழகம் என்பது தமிழகத்துக்கு சொந்தமானது. இரண்டையும் ஒப்பிடுவது என்பது அபத்தத்தின் உச்சம் என்பதை மருத்துவம் படித்த தமிழிசை உணராமல் இருப்பாரா? என்கிற கேள்வி எழுகிறது. நிச்சயம் தமிழக கல்வியாளர்களுக்கு திட்டமிட்ட அவமானத்தையே இச்சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன என்பதில் சந்தேகமே இல்லை.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications