அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேடு.. 10 பேர் மீது வழக்கு பதிவு
அண்ணா பல்கலை விடைத்தாள் முறைகேட்டில் தொடர்புடைய 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் தொடர்புடைய 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்து இருக்கிறது.
தற்போது அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வெற்றிபெற வைக்க மறுகூட்டலின் போது லஞ்சம் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பாடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று இருக்கிறார்கள்.
2017 கல்வி ஆண்டில் அண்ணா பல்கலையில் இந்த மோசடி நடந்து இருக்கிறது. அப்போது அண்ணா பல்கலையில் துணை வேந்தர் யாரும் இல்லாததை பயன்படுத்தி முறைகேடு நடந்து இருக்கிறது. சுமார் 10 பேராசிரியர்கள் வரை இந்த முறைகேட்டை செய்து உள்ளனர்.
தேர்வுக்கான கட்டுப்பாட்டாளர் ஜி வி உமா தலைமையில் இந்த மொத்த முறைகேடும் நடந்து இருக்கிறது. இந்த மோசடியில் தற்போது போலீஸ் சிலரை கைது செய்து விசாரித்து வருகிறது. எப்படி முறைகேடு நடந்தது என்று விசாரித்து வருகிறது.
தேர்வில் தோல்வி அடைந்த பல மாணவர்களிடம் லஞ்சம் வாங்கி, அவர்களை வெற்றிபெற வைத்து இருக்கிறார்கள். தற்போது பேராசிரியர் உமா உட்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் துணைவேந்தர் ஒருவர் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் இதுகுறித்து விரைவில் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளது.