அண்ணா பல்கலை தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு மோசடி... விரிவடையும் ஐடி சோதனை... சிக்கும் பேராசிரியர்கள்
அண்ணா பல்கலைக்கழக மோசடியில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மோசடியில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைகேட்டில் ஏற்கெனவே முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் பணி இடைநீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர் மீது வழக்கு
அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பேராசிரியை ஜி.வி.உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகளான உதவி பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் 7 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பழைய நடைமுறை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 23 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில்தான் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் மறுமதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்த உமா கடந்த 2017-ஆம் ஆண்டு பழைய நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்தார்.

கச்சிதமாக
23 மண்டலங்களில் நடைபெறும் மறுமதிப்பீட்டு முறையை ஒரே இடத்தில் திண்டிவனத்தில் நடத்துவதற்கான நடைமுறையை மாற்றியுள்ளார். எனவே மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு பணிகள் திண்டிவனம் மண்டல அதிகாரியான உதவி பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் கனகச்சிதமாக நடந்துள்ளது.

இடை நீக்கம்
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை விரிவடையும் பட்சத்திலும் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளின் பணி இடைநீக்கம் நீளுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications