முதலியார், பிள்ளைமார் ஆதரவு யாருக்கு? - அண்ணா வஉசி கூட்டமைப்பு அறிவிப்பு
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் முதலியார் மற்றும் பிள்ளைமார் சமூகத்தின் ஆதரவு யாருக்கு என்பதை அண்ணா - வஉசி கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.
தங்கள் சமுதாயத்தினரின் வளர்ச்சியை முன்னிறுத்தி, 2016 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு அதரவு கொடுப்பது என்பது குறித்து ஆராய ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிஞர் அண்ணா வஉசி கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள தனியார் ஓட்டலில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தலில் ஆதரவு தருவது தொடர்பான ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன், "தமிழகம் முழுதும் அனைத்து முதலியார், பிள்ளைமார், வேளாளர், செங்குந்தர் சமூகத்தினர் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் உள்ளனர். தனித்தனி சங்கங்கள், அமைப்புக்களாக இருந்தவர்களை ஒருங்கிணைந்து அறிஞர் அண்ணா வ.உ.சி., கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம். இந்தக் கூட்டமைப்பின் சார்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர் பேசும்போது, ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கிடும்போது, 20 சதவீத வாக்காளர்கள் இந்த சமுதாயத்தில் உள்ளனர். எனவே, அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கும் விதமாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த சமுதாயத்தினரின் பிரதிநிதிகள் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும். அதற்காக, எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக முடிவெடுக்க ஐந்து பேர் கொண்ட அணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எடுக்கும் முடிவின்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சமுதாயத்தின் அனைத்து மக்களும் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினர்.

இந்த கூட்டத்தில், தமிழகம், புதுச்சேரியில் இருந்து 42 பிரிவுகளின் பிரதிநிதிகள், கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஜி. விஸ்வநாதன், கௌரவத் தலைவர்கள் ஜெயபால் மற்றும் இயக்குநர் கே.ராஜன், தலைவர் கே.பி.கே. செல்வராஜ், பொதுச்செயலாளர் செவாலியர் அருணாசலம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications