கூவத்தூர் மட்டுமல்ல பூந்தண்டலம் பண்ணை வீட்டிலும் எம்எல்ஏக்கள் சிறை- அதிகாரிகள் விசாரணை
கல்பாக்கத்தை அடுத்த பூந்தண்டலம் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து செய்யாறு வட்டாட்சியர்
சென்னை: கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் பண்ணை வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் டிஎஸ்பி எட்வர்டு தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டனர்.
சிறைவைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை மீட்கக்கோரியும், அவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் உறவினர்கள் மற்றும் அனுதாபிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், விடுதிகளில் உள்ள எம்எல்ஏக்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.
கூவத்தூரில் சசிகலா ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள தனியார் விடுதியில் இன்று செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன், காஞ்சிபுரம் ஏடிஎஸ்பி, மாமல்லபுரம் டிஎஸ்பி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் 4 மணிநேரம் ஆய்வு நடத்தினர்.
அப்போது, அங்கு ஏழு அமைச்சர்கள் உள்பட 94 எம்எல்ஏக்கள் இருந்தனர். அப்போது, உணவு ஒழுங்காக வழங்கப்படுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சொந்த விருப்பத்தின் பேரில் தங்கியிருப்பதாகவும், யாரும் கடத்தப்படவில்லை என எம்எல்ஏக்கள் தெரிவித்ததாக தாசில்தார் கூறினார்.
ரிசார்ட்டில் வசதி சரியில்லை என்று கூறிய சில எம்எல்ஏக்கள் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் பண்ணை தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து செய்யூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன், டி.எஸ்.பி எட்வர்டு தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது 13ஆம் தேதியன்று உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Sasikala: சசிகலா கட்சி பெயர் அஇபுதமமுக! சட்டசபை தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டி -
விசில் + தென்னந்தோப்பு.. விஜய்யுடன் கூட்டணி அமைப்பீர்களா? சசிகலா நேரடியாக சொன்ன பதில்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications