சுவாதியைக் கொன்று விட்டுத் தப்பியது பைக்கில் வந்த இருவர்?.. புதுத் தகவலால் பரபரப்பு!
சென்னை: இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டாலும் கூட அரசுத் தரப்பைத் தவிர மற்ற அனைவருமே ராம்குமார் கொலையாளி இல்லை என்றுதான் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு புதுப் புதுத் தகவல்களும் வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சுவாதியைக் கொலை செய்து விட்டுத் தப்பியதாக இருவரைப் பிடித்து ரகசியமாக போலீஸார் விசாரித்து வருவதாக ஒரு புதுத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ம் தேதி காலையில் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக ராம்குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருப்பினும் கொலையாளி இவர் இல்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக புதுப் புது தகவல்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் சுவாதியைக் கொன்று விட்டு 2 பேர் பைக்கில் தப்பியதாக ஒரு தகவல் முன்பு உலா வந்தது. தற்போது அந்த பைக் நபர்களைப் போலீஸார் பிடித்து விட்டதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும், ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுகுறித்து தகவல் தெரிவிக்காமல் விசாரணை நடத்தி வருவதாகவும் ஒரு புதுத் தகவல் கூறுகிறது.

பைக்கில் வந்த இருவர்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் ரயில் நிலையத்திலிருந்து 2 பேர் தப்பிச் சென்றனர். அவர்கள் பைக்கில் சென்றது சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது. அவர்கள் கொலையாளிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகம் கிளப்பப்பட்டது.

யார் அவர்கள்
இந்த நிலையில் அவர்களை போலீஸார் பிடித்து ரகசியமாக விசாரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் போலீஸ் தரப்பில் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. அவர்கள் யார், உண்மையில் அவர்கள்தான் குற்றவாளிகளா என்பது தெரியவில்லை.

லேப்டாப்பில் ஆய்வு
இதற்கிடையே, சுவாதி இந்தியாவின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு கசிய விட்டார் என்று ஒரு தகவல் உலா வந்து கொண்டிருப்பது குறித்தும் ஒரு விசாரணை நடந்து வருகிறது. இதை மத்திய உளவுப்பிரிவு ரகசியமாக மேற்கொண்டுள்ளதாம். இதுதொடர்பாக சுவாதியின் லேப்டாப்பை அதிகாரிகள் சோதனையிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

மன உளைச்சலில் ராம்குமார்
இந்தப் பின்னணியில் சிறையில் ராம்குமார் பெரும் மன உளைச்சலில் இருப்பதாகவும், யாருடனும் பேச மறுப்பதாகவும் அவரது சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளார். கோர்ட்டில் விசாரணை வரும்போது போலீஸார் பல கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போலீஸ் தீவிரம்
இப்படி அடுத்தடுத்து பல சவால்கள் வெடித்துக் கிளம்புவதால் ராம்குமாருக்கு எதிரான அனைத்து ஆவணங்கள், ஆதாரங்கள், சாட்சிகளை போலீஸார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர். எதிலாவது சொதப்பினால் ஒட்டுமொத்த வழக்கும் தடுமாறிப் போகும் என்பதால் போலீஸ் தரப்பிலும் பதட்டம் இன்னும் தணியவில்லையாம். வருகிற திங்கள்கிழமை ராம்குமாருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள விசாரணைக்கு வரவுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications