மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்துள்ளனர்... நடிகர் ராகவா லாரன்ஸ் பகீர்
மாணவர்கள் போர்வையில் வேறு யாரோ நுழைந்து போராட்டத்தை திசை திருப்பியுள்ளனர் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் வீடு திரும்புமாறும் அவர் கேட்டுக் கொண
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்கள் மத்தியில் வேறு யாரோ கலந்து விட்டார்கள் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.
மெரினாவில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் கேட்டுக் கொண்டார்.
மேலும், சென்னை மெரினா கடற்கரைக்கு வந்த நடிகர் லாரன்ஸ் அளித்த பேட்டியில், மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக மட்டும்தான் 7 நாட்களாக போராடினார்கள் என்றும், ஆனால் மாணவர்களோடு தொடர்பு இல்லாத சிலர் வேறு சில கோரிக்கைகளை போராட்டத்தில் திணித்துள்ளனர் என்று லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் பிறப்பித்ததுள்ள நிலையில், நாம் பெற்ற வெற்றியை கொண்டாட வேண்டிய நேரம் இது என்றும் இளைஞர்களிடம் லாரன்ஸ் எடுத்துக் கூறினார்.
மெரினாவில் இருந்து இளைஞர்கள், மாணவர்களை கலைந்து செல்லும் படி கேட்டுக் கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவர்கள் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications