நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு: கைது செய்யப்பட்ட சீமான், பாரதிராஜா உள்ளிட்டோரை பார்க்க அனுமதிக்காத போலீஸை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார். அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் ஏப்ரல் 12-ஆம் தேதி சென்னையில் நடந்த ராணுவ தளவாட பொருட்கள் கண்காட்சியில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகள் சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

10 பேர் கொலை வழக்கு
இதில் பாரதிராஜா, சீமான், அமீிர், கௌதமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே அண்ணா சாலை புரட்சியின்போது போலீஸ்காரரை தாக்கியதக நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விடுவிக்கப்படவில்லை
மோடி சென்றவுடன் சீமானை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும், மோடி டெல்லி செல்ல விமானம் ஏறிய பிறகும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்படாத செய்தி பரவியது. இதையடுத்து பல்லாவரம் திருமண மண்டபத்துக்கு மன்சூர் அலிகான் சென்றார். சீமான் உள்ளிட்டோரை பார்க்க போலீஸார் அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து தன்னையும் கைது செய்யுமாறு அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

விடுவிப்பு இல்லை
இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். எனினும் சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டு மன்சூர் அலிகான் மட்டும் விடுவிக்கப்படவில்லை.

கமிஷனர் அலுவலகத்தில்...
இதையடுத்து கடந்த சனிக்கிழமை சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த சிம்பு அங்கு கமிஷனரை சந்தித்து மன்சூர் அலிகானை கைது செய்தது ஏன் என்று கேட்டார். மேலும் உடல்நிலை சரியில்லாத அவரை விடுவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

நிபந்தனை ஜாமீன்
மன்சூர் அலிகான் ஜாமீன் கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி, மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதாவது மறு உத்தரவு வரும் வரை செங்கல்பட்டு காவல் நிலையத்தில் அவர் கையெழுத்திட வேண்டும் என்பதுதான் நிபந்தனை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications