அக்டோபர் 4-ஆம் தேதியே ஜெ.வுக்கு நெஞ்சுவலி- அப்பல்லோ ஆவணத்தில் தகவல்
அக்டோபர் 4-ஆம் தேதியே ஜெ.வுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக அப்பல்லோ ஆவணத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அக்டோபர் 4-ஆம் தேதியே ஜெ.வுக்கு முதல் முறையாக நெஞ்சுவலி ஏற்பட்டதாக அப்பல்லோ ஆவணத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் கடந்த நவம்பர் மாதம் விசாரணையை தொடங்கினார்.
20-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் இன்றைய தினம் ஆஜராகுமாறு அப்பல்லோ மருத்துவர் அர்ச்சனாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி அவர் இன்று ஆஜரானார். அக்டோபர் 4-ஆம் தேதியே ஜெ.வுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக அப்பல்லோ ஆவணத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பல்லோ தந்த ஆவணப்படி 2016, அக். 4-ஆம் ஆண்டு பணியில் இருந்தவர் மருத்துவர் அர்ச்சனா.
இதனால் அக்டோபர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நெஞ்சு வலி குறித்து
அர்ச்சனாவிடம் ஆணையம் கேள்வி எழுப்பியது. அதற்கு அவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை.