முதல்வர் எடப்பாடியுடன் அப்பல்லோ பிரீதா ரெட்டி திடீர் சந்திப்பு- கோட்டையில் பரபரப்பு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அப்பல்லோ மருத்துவமனை பிரீதா ரெட்டி திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவர் பிரீதா ரெட்டி திடீரென சந்தித்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா அப்பல்லோவில் சேர்க்கப்பட்டது முதலே தொடர் சர்ச்சைகள்தான். கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்தது முதன் முதலில் ட்விட்டரில் போட்டவர்தான் பிரீதா ரெட்டி.

இன்னமும் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பான முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை மீதான சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிடவில்லை.
இந்நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் பிரீதா ரெட்டி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications