புளியரை பகுதியில் நடமாடும் புலியை பிடிக்க கூடுதல் கூண்டு: வனத்துறை அதிகாரி தகவல்
நெல்லை அருகே உள்ள கிராமங்களில் புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை: புளியரை பகுதியில் நடமாடும் ஒற்றை புலியை பிடிக்க கூடுதல் கூண்டு வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியரை பகுதியில் கடந்த இரண்டு மாதமாக பவனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி ஒன்று நடமாடி வருகின்றது. இந்த புலி புளியரை ஸ்ரீ மூலப்பேரி நீர்த்தேக்கம், மலையடிவார தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை இழுத்துச் செல்வதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து புலியை பிடிக்க புளியரையில் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் புலி சிக்காமல் தப்பித்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பும் புலி அட்டகாசம் செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து விவசாயிகள் புலியை பிடிக்க கோரிக்கை விடுத்துவந்தனர்.இதனைத் தொடர்ந்து நெல்லை
மாவட்ட வன அதிகாரி சம்பத் செங்கோட்டையில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், தனியார் காடுகளில் நடமாடும் ஒற்றை புலியை பிடிக்க ஏற்கனவே ஒரு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதல் கூண்டுக்கள் வைக்கப்பட உள்ளன.இது குறித்து யாரு ம் அச்சப்படத் தேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications