ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கிறோம்... ரவிசங்கர் பிரசாத், பொன்னார் உறுதி
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உறுதியளித்துள்ளனர்.
மதுரையில் நடைபெற்ற வீரன் அழகுமுத்துக்கோன் தபால் தலை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , மத்திய அமைச்சர் ஜாவடேக்கரை சந்தித்து ஏற்கனவே பேசியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரண உதவிகளை மதிய அரசு ஏற்கனவே செய்துள்ளது. தொடர்ந்து தேவையான உதவிகள் வழங்கப்படும்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு பாகிஸ்தான் சென்று அந்நாட்டு பிரதமரை சந்தித்தது பிரதமர் நரேந்திர மோடி மட்டும்தான். இந்த சந்திப்பை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐ.நா சபையும் வரவேற்றுள்ளது. இதிலிருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது. இதில் விமர்சனம் செய்ய எதுவும் இல்லை.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது, ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். இதற்கான தடையை மத்திய அரசு பரிசீலனை செய்து நீக்கும் என்றார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications