ராஜிவ் கொலையில் விடுபட்டுப்போன விவகாரங்கள்.. விசாரிக்க கோரி தடா நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குறித்து விசாரணை நடத்தும் சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) மற்றும் பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு ஆணையத்தை (எம்.டி.எம்.ஏ)யும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பிரதிவாதியாகச் சேர்த்து பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
நான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 18-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டேன். தற்போது தூக்கு தண்டனையை எதிர்கொண்டுள்ளேன். அப்போதிருந்த ஆதாரங்களை மட்டும் வைத்து தடா நீதிமன்றம் எனக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் 1999-ம் ஆண்டு உறுதி செய்தது.
பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு விசாரணை என்ன ஆனது?
இந்த வழக்கின் எப்.ஐ.ஆர். இன்னும் இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதில் விசாரணை காலதாமதம் ஆவதால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிலரை இந்த வழக்கில் கொண்டு வரவில்லை. பல உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் வெளிச்சத்துக்கு வர வேண்டும். இதையெல்லாம் எஸ்.ஐ.டி. மற்றும் எம்.டி.எம்.ஏ. காட்டவில்லை.
ராஜீவ் கொலையின் பின்னணியில் சதித்திட்டத்தில் ஈடுபட்ட சில அரசியல்வாதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை கண்டுபிடிப்பதற்காக மேல் விசாரணைக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் மறு விசாரணை வேண்டும் என்பது எனது கோரிக்கை அல்ல.
ஆவணங்களை தாக்கல் செய்க
இந்த விசாரணை அமைப்புகளால் நடத்தப்படும் பெயரளவு விசாரணையால் எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே நீதிமன்றத்தின் கண்காணிப்பில் துரிதமான விசாரணை நடத்தப்படுவது அவசியம். முன்பு நடந்த விசாரணையில் விடுபட்டுப்போன பகுதிகளையும் விசாரணையில் சேர்க்க வேண்டும். இந்த விசாரணையை முன்பு நடத்தி இருந்தால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இந்த வழக்கில் இதுவரை சி.பி.ஐ.யின் இரண்டு விசாரணை அமைப்புகளும் மேற்கொண்டுள்ள விசாரணை ஆவணங்கள், பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் கூறியுள்ள படி, சதித்திட்டத்தில் ஈடுபட்ட சிலரை கண்டுபிடிப்பதற்கு மேல்விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். வெளிநாட்டினரின் பின்னணியும் இருக்கிறதா என்பதை சரியாக விசாரிக்கவில்லை.
சேஷன் சொன்னது பற்றி விசாரணை இல்லையே..
ராஜிவ் காந்தியின் மரணம் பற்றி ஜோதிடத்தின் மூலமாக ஒரு வாரத்துக்கு முன்பே தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சேஷன் தமது புத்தகத்தில் கூறியுள்ளார். அப்படி என்றால், ஏன் ராஜிவ் பாதுகாப்பு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தவில்லை? என்பதையெல்லாம் விசாரிக்கவில்லை.
எனவே இந்த விஷயத்தில் மேல் விசாரணை தேவை. இதுவரை இரண்டு விசாரணை முகமைகளும் நடத்திய விசாரணையின் ஆவணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இம் மனு மீதான விசாரணையை நீதிபதி தண்டபாணி வரும் 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications