அரியலூரில் அரசு வக்கீலின் குமாஸ்தா குடும்பத்தோடு தற்கொலை

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூரில் அரசு வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வந்தவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார்.

Ariyalur clerk suicide with family

இந்நிலையில் இவர் மனைவி நிர்மலா, மகன் ரோகன் ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டு தானும் தீவைத்துக் கொண்டார். பெற்றோர் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மகன் தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பலியானார்.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணி குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கந்துவட்டி தற்கொலையா, கடன் ஏதும் வாங்கியிருந்தா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+