அரியலூர் மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசிய முன்னாள் எம்எல்ஏ கைது
அரியலூர் மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசிய முன்னாள் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியரை ஒருமையில் பேசிய முன்னாள் எம்எல்ஏ கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி பிரியா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது அங்கு வந்த முன்னாள் பெரம்பலூர் தொகுதி (காங்கிரஸ்) எம்எல்ஏ நல்லமுத்து தான் கொடுத்த மனுவிற்கு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது ஒருமையில் பேசியதால் ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் லெட்சுமி ப்ரியா முன்னாள் எம்எல்ஏ நல்ல முத்துவை கைது செய்ய உத்தரவிட்டார்
இதன் பெயரில் போலீசார் நல்ல முத்துவை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications