சென்னை: காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை பிரிவு இன்ஸ்பெக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னை பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது மனைவி புவனேஷ்வரி மற்றும் இரண்டு மகன்களுடன் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். ரவிச்சந்திரன் குடும்பத்தினர் வெளியூர் சென்றுவிட்டதாகவும், அவர் மட்டும் விடுப்பில் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவரது வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்ட நிலையில் ரவிச்சந்திரனின் சடலத்தை ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட ரவிச்சந்திரன், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கூடுதல் பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐபிஎஸ் அதிகாரியான ஹரீஷ் காவல் அதிகாரிகள் விருந்தினர் இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குதற்குள், ஆயுதப்பிரிவு ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications