மீண்டும் சிக்கலான பேரறிவாளன் விடுதலை.. கடைசியில் ஏமாற்றிவிடுவார்களோ? தாய் அற்புதம் அம்மாள் கண்ணீர்
சென்னை: ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுவதால் நம்பிக்கை இழக்கிறோம் என்று 7 தமிழரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரையும் மாநில அரசு தமக்கான அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனடிப்படையில் தமிழக அரசும் ஏழு தமிழரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

மேலும் இது குறித்து மத்திய அரசின் கருத்தையும் கோரி கடிதம் அனுப்பியிருந்தது தமிழக அரசு. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; இந்த 7 தமிழரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை எனக் கூறிவிட்டது.
இந்நிலையில் தமிழக அரசு தமக்கான மாநில அரசின் அதிகாரம் உள்ள அரசியல் சாசனம் 161-வது பிரிவின் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியதாவது:
இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட அறிவு வந்துடுவான்னு நம்பினேன். இப்படி நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வழக்கமாகப் போய்விட்டது.
இப்பவும் முதல்வரைத்தான் நம்பி இருக்கோம். தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னதாக 7 பேரையும் விடுதலை செய்வார் என நம்பினோம். அவர் பிரசாரத்தைத் தொடங்கியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில் இப்போதும் முதல்வர் நடவடிக்கை எடுக்கலாம். இது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை. பெரிய மகள் வீட்டுல பேரறிவாளன் அப்பா உடல் நலமில்லாமல் படுக்கையாக இருக்கிறார். அவர் நம்பிக்கை இழந்துட்டார்.
ஒவ்வொரு முறையும் ஏமாறும்போது இப்படியே கடைசி வரையில ஏமாற்றிவிடுவார்களோ என எண்ண நினைக்கிறது. நாங்கள் இறந்த பின்னால் இறுதி வாழ்க்கையை பேரறிவாளன் நிம்மதியாக வாழ முடியுமா?
இவ்வாறு அற்புதம் அம்மாள் கூறினார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications