ஜெ.,அவதூறு வழக்கு: விஜயகாந்த், பிரேமலதாவிற்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரண்ட்
திருப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு உத்தரவிட்டார். 2015ல் நவம்பர் 6ல் பல்லடம் பொதுக்கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.
திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் மக்களுக்காக மக்கள் பணி என்ற பெயரில் சித்த மருத்துவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம்தேதி நடந்தது.

இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது தமிழக அரசு பற்றியும், முதல்வர் ஜெயலலிதா பற்றியும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு சார்பில் திருப்பூர் மாவட்ட அரசு வக்கீல் கே. என்.சுப்பிரமணியம் திருப்பூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பல்லடம் காளிவேலம்பட்டி பிரிவு அருகில் தே.மு.தி.க. சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசியதாகவும்,அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டமாவட்ட முதன்மை மற்றும்அமர்வு நீதிபதி(பொறுப்பு) முகமது ஜியாவுதீன், விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும், இதுதொடர்பாக அவர்களுக்கு சம்மன் அனுப்பவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால் விஜயகாந்தும், பிரேமலதாவும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், இருவரும், 4 முறை விசாரணைக்கு ஆஜராகாததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு உத்தரவிட்டார்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications