ஆந்திராவில் அதிகாலையில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் இரவில் விடுதலை
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் ரேணிகுண்டா வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
Recommended Video

ரேணிகுண்டா: செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 84 தமிழர்களும் ரேணிகுண்டா வட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆந்திரா மாநிலத்தில், தமிழர்கள் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி, அங்குள்ள போலீசாரால் கைது செய்யப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.

நேற்று நள்ளிரவு 3 மணியளவில், திருப்பதியை அடுத்து உள்ள ஆஞ்சநேயபுரம் சோதனை சாவடியில் 84 தமிழர்களைச் செம்மர கடத்தல்தடுப்பு காவல்துறை கைது செய்துள்ளனர். லாரியில் சென்ற தமிழர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பின்பு, அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் அனைவரும் வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் செம்மரம் வெட்ட ஆந்திர மாநிலம் கடப்பா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், அனைவரையும் கைது செய்து ஆஞ்சநேயபுரம் சோதனைசாவடியிலேயே தங்கவைத்து விசாரித்தனர்.
84 தமிழர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிப்பது குறித்து திருப்பதி வனத்துறையினர் செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி ரவிசங்கர், கைதான 84 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்றார். கைதானவர்களில் 42 பேர் திருவண்ணாமலையை சேர்ந்தவர்கள், 42 பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்றும் அனைவரும் வட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் எஸ்.பி ரவிசங்கர் கூறினார்.
இந்தநிலையில் ரேணிகுண்டா வட்டாட்சியரிடம் ஆஜர்படுத்தப்பட்ட 84 பேரும் பிணைத்தொகை செலுத்தி விடுதலை பெற்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications