ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை வேண்டும்.. ஆறுமுகசாமி புகார்
ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆறுமுகசாமி புகார் அளித்து இருக்கிறார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்த செய்யும் விசாரணை ஆணையத்தின் செயலாளரான ஆறுமுகசாமி, வெற்றிவேல் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறார். ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆர். கே நகர் தேர்தல் நாளை நடக்க இருக்கிறது. அதேபோல் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. இந்த நிலையில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டு இருக்கிறது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த செய்யும் விசாரணை ஆணையத்தின் செயலாளரான ஆறுமுகசாமி காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது புகார் அளித்து இருக்கிறார்.
அவர் தனது புகாரில் ''ஜெ.சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தன்னிச்சையாக வீடியோவை வெளியிட்டது விசாரணை ஆணையத்தை அவமதிக்கும் செயல்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே தேர்தல் நேரத்தில் மக்கள் மனதை பாதிக்கும் வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது 126 (1பி) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது இவர் மீது அடுத்த வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
இந்த புகாரை ஆறுமுகசாமி அண்ணா சதுக்கத்தில் இருக்கும் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.