அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் தூக்குப் போட்டு தற்கொலை.. என்ன காரணம்?

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்துவெங்கடேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் முத்துவெங்கடேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையராக முத்துவெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அரசு குடியிருப்பில் வசித்து வந்த இவர், நேற்றிரவு தனது அறைக்கு தூங்கச் சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை திறந்து பார்த்துள்ளனர்.

Aruppukotai Municipal Commissioner commits suicide by hanging

அப்போது முத்துவெங்கடேஷ் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் தூக்கில் தொங்கிய முத்து வெங்கடேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பணிச்சுமை காரணமாக முத்துவெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+