பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளிக்கு வலைவீச்சு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் மாணவி ஒருவரை பலாத்காரம் செய்ததாக கட்டிடத் தொழிலாளி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கல்குறிச்சி பாரதி நகரை சேர்ந்த இளையராஜா ஒரு கட்டிட தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும் போது பார்த்து ஆசைப்பட்டுள்ளார்.

அவரிடம் பேச்சு கொடுத்து திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஆனால் மாணவி இதற்கு மறுத்துவிட்டார். நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாணவி திரும்பியபோது இளையராஜா வழிமறித்து தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். ஆனால் மாணவி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மாணவியின் தாய் சென்று கேட்டபோது அவருக்கும் இளையராஜா கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications