ஆரியர், திராவிடர் விவகாரம்; விவாதப்பொருளாக்க விரும்பவில்லை: கருணாநிதி
சென்னை: ஆரியர், திராவிடர் குறித்து கட்ஜூ கூறியதை விவாதப் பொருளாக்க விரும்பவில்லை என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''நீதிபதி அசோக்குமார் நியமனத்தில் தி.மு.க. மீது கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது'' என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக்குமாரை, நிரந்தர நீதிபதியாக நியமிப்பதில் அரசியல் தலையீடு இருந்தது என்று தன்னுடைய முகநூலில் சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ. இவர், தற்போது ஆரியர் மட்டுமல்ல, திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான் என்று பரபரப்பாக பேசியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் பேசிய நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, சமஸ்கிருதம் மொழி, பிற மொழிகளை எல்லாம் அழிக்கும் மொழி என்று கூறுவதை ஏற்க முடியாது. சமஸ்கிருதம் மொழி, அறிவியல் ரீதியான கட்டமைப்புகளை கொண்ட மொழியாகும்.
இந்தியாவுக்குள் ஆரியர்கள் வந்து குடியேறினார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், ஆரியர் வருவதற்கு முன்பு திராவிடர்கள் இங்கு குடியேறினார்கள். இதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளது. எனவே, ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள்தான்.
இவர்கள் குடியேறுவதற்கு முன்பு, வனப்பகுதியில் பூர்வீக குடிமக்களான பழங்குடியினர் மட்டுமே வாழ்ந்தனர். இந்த பழங்குடியினர்தான், இந்தியாவின் பூர்வீக குடிமக்களாவார்கள்.
தற்போது இந்து-முஸ்லிம் பிரச்சினை என்பது நம் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் முதல் இந்த பிரச்சினை இருந்தது வருகிறது. இந்த பிரச்சினையால்தான், நாடு முன்னேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று பேசினார்.
இந்த கருத்து பற்றி திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,
அதற்கு பதிலளித்த கருணாநிதி, ஆரியர், திராவிடர் பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ''கட்ஜூ கூறியதைப் பற்றி பேசி அதை விவாதப் பொருளாக்க விரும்பவில்லை'' என்றார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications