உயிருக்கு பயந்து ஓடிய அஸ்வினி.. விரட்டி சென்று கழுத்தை அறுத்த கொலையாளி.. சாலையெங்கும் ரத்தம்!
Recommended Video

சென்னை: சென்னையில் மாணவி அஸ்வினி, அழகேசன் என்பவரால், கொலை செய்யப்பட்ட இடத்தின் சுற்றுவட்டாரத்தில் அவரின் ரத்தம் வழிந்தோடியுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரி வாசலில் வைத்து அஸ்வினி என்ற அதே கல்லூரியில், பிகாம் முதலாமாண்டு படித்த மாணவியை மதுரவாயலை சேர்ந்த அழகேசன் என்பவர் கல்லூரிக்கு அருகே கத்தியால் குத்தியும், கழுத்தையறுத்தும் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதலால் இக்கொலை நடந்துள்ளது. அஸ்வினி மதுரவாயலை சேர்ந்தவர். அதே பகுதியை சேர்ந்த அழகேசன், அஸ்வினி கல்லூரி செல்லும்போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள்ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, காவல்துறையில் புகார் அளித்து சிறையில் தள்ளினார்.

தப்பியோடிய மாணவி
ஜாமீனில் வெளிவந்த அழகேசன், சுமார் ஒரு அடி நீளமுள்ள பெரிய கத்தியொன்றை எடுத்து வந்து கல்லூரியில் இருந்து இன்று மாலை வெளியே வந்த அஸ்வினியை குத்தி கொலை செய்ய முயன்றான். இதை பார்த்து பயந்துபோன அஸ்வினி, அங்கேயிருந்து உயிருக்கு பயந்து தப்பியோடியுள்ளார். விடாமல் விரட்டிய கொலையாளி அழகேசன், அவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

துரத்திய கொலை
குத்துபட்டாலும், உயிரை காப்பாற்றிக்கொள்ள, அலறியபடியே அஸ்வினி ஓடியுள்ளார். அப்போது அவர் ஓடிய சாலையெங்கும் ரத்தம் சிந்தியது. இதை பார்த்தும் மனது இளகவில்லை கொலையாளி அழகேசனுக்கு. குறிப்பிட்ட தூரம் ஓடிய அஸ்வினியால் அதற்கு மேல் ஓட முடியவில்லை.

கழுத்தையறுத்த படுபாதகன்
ஒரு வீட்டின் அருகே சென்றபோது, அஸ்வினியின் ஓடும் வேகம் குறைந்தது. இனியும் குத்தக்கூடாது என முடிவு செய்த அந்த கொடூர கொலையாளி, பெண் என்றும் பாராமல், அஸ்வினியின் கழுத்தை பிடித்து அறுத்துவிட்டான். ரத்த வெள்ளத்தில் அஸ்வினி அங்கேயே துடிதுடித்து வீழ்ந்தார்.

தூக்கிப்போட்டு மிதித்தனர்
அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு அங்கே ஓடிவந்த சில இளைஞர்கள், நடந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலையாளி கையில் கத்தி இருந்தபோதும், அச்சப்படாத அந்த இளைஞர்கள், அவனை மடக்கி பிடித்து, தூக்கிப்போட்டு மிதித்தனர். வாய், முகத்தில் ரத்தம் வடியும் அளவுக்கு, அழகேசனை அடித்து விளாசினர். அதற்குள் போலீசார் அங்கே விரைந்ததால், கொலையாளியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சாலையில் வழிந்துள்ள ரத்தம்
அஸ்வினி குத்துபட்டு ஓடிய சாலையில் ரத்தம் வழிந்துள்ளது. போலீசார் அவற்றை பரிசீலனை செய்தனர். ரத்தத்தின் மீது மணலை போட்டு மூடி வைத்தனர். பட்டப்பகலில் மக்கள் கண் எதிரில் நடந்த இந்த படுபாதக கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
காக்கிச் சட்டை டூ எம்.எல்.ஏ..! தேர்தல் ஆணையம் அதிகாரிகளை அதிரடியாக மாற்றுவது ஏன் தெரியுமா? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications