அமைச்சர்கள் வேறு முதல்வர் கேட்பது நாகரீகமற்றது: திருநாவுக்கரசர் கொதிப்பு!
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் போதே அதிமுக அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது நாகரீகமற்றது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கும்போதே அதிமுக அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது நாகரீகமற்ற ஒன்று என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சாடினார்.
டெல்லி செல்லும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது குறித்து செய்தியாளர்கள் திருநாவுக்கரசரிடம் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் முதல்வர் பன்னீர்செல்வம் இருக்கும் போதே அமைச்சர்கள் வேறு முதல்வரை கேட்பது நாகரீக மற்றது என்றார்.
ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றார்.
மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications