அதிமுக நேர்காணல்... இன்று 7 மாவட்ட வேட்பாளர்களுக்கு ஜெ. அழைப்பு
சென்னை: 7 மாவட்ட அதிமுகவினருடன் ஜெயலலிதா இன்று நேர்காணல் நடத்துகிறார். நேற்று விடுபட்ட வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினர் உடன் நேர்காணல் நடத்த உள்ளார். மேலும் விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தினரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் வேட்பாளர் தேர்வுக்கான 2ம் கட்ட நேர்காணல் நேற்று திடீரென தொடங்கியது. 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் முதல்வர் ஜெயலலிதா நேர்காணல் நடத்தினார்.
அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தமிழகத்தில் 17,698 பேரும், புதுச்சேரியில் 332 பேரும், கேரளாவில் 208 பேரும் விருப்ப மனு அளித்திருந்தனர். கடந்த 6ம் தேதி முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் திடீரென வேட்பாளர் நேர்காணல் நடந்தது. இதில், 5 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
அதன்பிறகு நேர்காணல் தொடர்ந்து நடத்தப்படவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக் குடி, ராமநாதபுரம். திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்திருந்தவர்கள், நேர்காணலுக்கு வருமாறு ஞாயிறன்று இரவு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அவசரமாக புறப்பட்டு நேற்று காலை சென்னை வந்தனர்.
காலை 10 மணி முதலே போயஸ் தோட்ட பகுதியில் விருப்ப மனு அளித்தவர்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் முதல்வர் இல்லத்துக்குள் அனுப்பி வைத்தனர். ஆனால், முதல்வர் இல்லத்தில் உள்ளவர்கள், பிற்பகல் 1.30 மணிக்குதான் நேர்காணல் எனவே, அப்போது வாருங்கள் என கூறி திருப்பி அனுப்பினர். அதனால் அவர்கள், பகல் 1 மணி வரை அங்கேயே காத்திருந்தனர்.
அதன்பின், 1.20 மணிக்கு விருப்ப மனு அளித்திருந்தவர்கள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின்போது, அமைச்சர் வைத்திலிங்கம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் முதல்வருடன் இருந்தனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும், சில தொகுதிகளுக்கு மட்டுமே தகுதியானவர்கள் அழைக்கப்பட் டிருந்தனர். சில தொகுதிகளுக்கு 3 பேர், சிலவற்றுக்கு 2 அல்லது ஒருவர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

இன்றைய நேர்காணல்
நேரமின்மை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களுக்கான நேர்காணல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது நாளாக இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் நேர்காணல் தொடங்கியது.

7 மாவட்டங்கள்
நேற்று விடுபட்ட வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தினர் உடன் நேர்காணல் நடத்த உள்ளார். மேலும் விருதுநகர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தினரும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

5 நாட்களுக்கு நேர்காணல்
இந்த 2ம் கட்ட நேர்காணல் மேலும் 5 நாட்களுக்கு நடக்கும் என அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது. நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருந்தனர்.

பெண் வேட்பாளர்கள்
40 சதவீதம் பெண்கள் நேர்காணலில் பங்கேற்றனர். அவர்களிடம் கல்வித்தகுதி, தொகுதியில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு, செல்வாக்கு ஆகியவை குறித்து ஜெயலலிதா கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications