For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"அப்போது" மட்டும் என் தம்பி ஆணாக தெரிந்தாரா??.. நிலானிக்கு லலித்குமார் அண்ணன் கேள்வி!

இரவு 10மணிக்கு மேல் வீட்டிற்கு வரசொல்லி ஜாலியாக இருந்தபோது மட்டும் என் தம்பி ஆண்பளையாக இருந்தானா? என காந்தி லலித்குமாரின் அண்ணன் ரகு குமார் நிலானிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நிலானியை கேள்வி கேட்ட காந்தி லலித்குமார் அண்ணன்- வீடியோ

    சென்னை: இரவு 10மணிக்கு மேல் வீட்டிற்கு வரசொல்லி ஜாலியாக இருந்தபோது மட்டும் என் தம்பி ஆண்பளையாக இருந்தானா? என காந்தி லலித்குமாரின் அண்ணன் ரகு குமார் நிலானிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

    சீரியல் நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் காந்தி லலித்குமாரும் நிலானியும் ஒன்றாக இருக்கும் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகியது. இதனால் நிலானி காந்தி லலித்குமாரை காதலித்து ஏமாற்றியது உண்மை என கூறப்பட்டது.

    நிலானி கோரிக்கை

    நிலானி கோரிக்கை

    ஆனால் காந்தி லலித்குமார் தற்கொலை தான் காரணமில்லை என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார் நிலானி. மேலும் தன்னை பற்றி அவதூறு பரபரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    நிலானி தற்கொலை முயற்சி

    நிலானி தற்கொலை முயற்சி

    மேலும் லலித் குமார் ஒரு ஆம்பளையே இல்லை, அவர் ஒரு சைக்கோ, என் உடம்பு முழுவதும் சூடு போட்டுள்ளார் என சரமாரியாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் நேற்று நடிகை நிலானி தனது வளசரவாக்கம் வீட்டில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    செய்த தவறு

    செய்த தவறு

    இந்நிலையில் நிலானியின் குற்றச்சாட்டுகளுக்கு காந்தி லலித் குமாரின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து லலித்தின் அண்ணன் ரகு குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, என் தம்பி நடிகை நிலானியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததுதான் அவன் செய்த மிகப்பெரும் தவறு.

    பணத்தை பறித்தார்

    பணத்தை பறித்தார்

    நிலானிக்காக தனது உயிரை தீயில் மாய்த்துக்கொண்டான். என் தம்பியுடன் 3 ஆண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்திவிட்டு இன்று அவன் சைக்கோ என்று கூறுகிறார். திருமணமாகாத என் தம்பியை காதல் வலையில் சிக்க வைத்து அவனிடம் இருந்த பணம் முழுவதையும் பறித்தார் நிலானி.

    தனது குழந்தைகள் போல்

    தனது குழந்தைகள் போல்

    நிலானி வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் என் தம்பி உழைப்பால் வாங்கி கொடுத்தது. 3 ஆண்டுகளாக நிலானியின் இரண்டு குழந்தைகளையும் தன் குழந்தை போல் காலை மற்றும் மாலையில் பள்ளிக்கு சென்று அழைத்து வருவார். இப்படி இருந்த என் தம்பி எப்படி இன்று கெட்டவன்?

    நிலானிதான் என் மனைவி

    நிலானிதான் என் மனைவி

    என் தம்பியிடம் நடிகை எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரி வராது விட்டு விடு என்று எவ்வளவோ எடுத்து கூறினோம். ஆனால் அவன் விடாமல் நிலானிதான் என் மனைவி என்று கூறி 3 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்தான்.

    இரவில் ஜாலியாக இருந்தபோது?

    இரவில் ஜாலியாக இருந்தபோது?

    3 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு அவன் இறந்த பிறகு அவனுக்கு ஆண்மை இல்லை என்று கூறுகிறார். இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வரவழைத்து ஒன்றாக இருந்த போது தெரியவில்லையா? ஜாலியாக இருந்த போது மட்டும் என் தம்பி ஆண் மகனாக இருந்தானா?

    ஆதாரங்களை வெளியிடுவேன்

    ஆதாரங்களை வெளியிடுவேன்

    மேலும் நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. அவர் குடிக்கு அடிமையானவர் என்றும் ரகுகுமார் குற்றம்சாட்டினார். மேலும் தனது தம்பி மீது அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் ஆதாரங்களை வெளியிட்டு வழக்கு தொடருவேன் என்றும் காந்தி லலித்குமாரின் சகோதரர் ரகு எச்சரித்துள்ளார்.

    English summary
    Assistant director Gandhi Lalithkumar brother Rahukumar warns Nilani to stop slandering about Gandhi lalith kumar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X