சுவாதி போல அஸ்வினி கழுத்தை அறுத்து கொலை - கல்லூரிக்கு விடுமுறை

நுங்கம்பாக்கம் சுவாதி போல மாணவி அஸ்வினியும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை கே.கே. நகரில் மாணவி கல்லூரி வாசலில் குத்திக்கொலை- வீடியோ

    சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்டது போல கே கே நகர் கல்லூரி மாணவி அஸ்வினி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவி கொலையால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு அடி நீள கத்தியை வைத்து அந்த மாணவியின் கழுத்தில் குத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதற்றத்துடன் தெரிவித்துள்ளனர்.

    ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அஸ்வினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

    கல்லூரி மாணவி

    கல்லூரி மாணவி

    மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் அஸ்வினி. கே கே நகர் மீனாட்சி கல்லூரியில் பி காம் படித்து வருகிறார். இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த அழகேசனுக்கு ஒருதலைக்காதல். விடாமல் விரட்டி தொந்தரவு செய்யவே தனது வீட்டை ஜாபர்கான் பேட்டைக்கு மாற்றினார் அஸ்வினி.

    கழுத்தை வெட்டிய இளைஞர்

    கழுத்தை வெட்டிய இளைஞர்

    தொந்தரவு தொடரவே அழகேசன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அழகேசனை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த அழகேசன் இன்று அஸ்வினியை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்தான்.

    காத்திருந்த அழகேசன்

    காத்திருந்த அழகேசன்

    சுகாதாரதுறையில் வேலை செய்து வரும் அழகேசன், அஸ்வினி மீது கடும் கோபத்தில் இருந்தான். கல்லூரி வாசலில் காத்திருந்த அழகேசனை கண்டு அதிர்ச்சியடைந்தார் அஸ்வினி. வாக்குவாதம் நடந்துள்ளது. அஸ்வினியை அழகேசன் விரட்டினார்.

    கொலையான அஸ்வினி

    கொலையான அஸ்வினி

    அஸ்வினியை விடாமல் விரட்டிய அழகேசன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தில் குத்தினான். ரத்த வெள்ளத்தில் அஸ்வினி சாய்ந்ததை பார்த்த மாணவர்கள் அழகேசனை பிடித்து அடித்து உதைத்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் பதற்றமடைந்தனர். கழுத்தில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் அஸ்வினி துடித்துக்கொண்டிருந்தார்.

    போகும் வழியில் உயிரிழப்பு

    போகும் வழியில் உயிரிழப்பு

    அஸ்வினி துடிப்பதைப்பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தோம். சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதன் காரணமாகவே அஸ்வினி பலியாக காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவி கொலையால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருதலைக்காதலில் சுவாதி கொலை செய்யப்பட்டார். அதே போல ஒரு கொலை தற்போது நிகழ்ந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+